ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து
வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வறண்ட காற்று அதன்
எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன்
மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று
மோதும்போது அதிலிருந்து வெளிப்படும் விசையே சூறாவளி எனப்படுகிறது.
இந்த மோதல்கள் அதிகமான அளவு நடை
பெறும்போது அந்த சூறாவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ
எனப்படுகிறது. டொர்னடோ என்ற பயங்கரமான சூறாவளி வீசுவதற்கு முன்னர்
ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம். அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின்
கூரைகளைத் துவம்சம் செய்துவிடுமாம்.
வானத்தில் ஒரு பயங்கரமான சூறாவளி
உருவாகிவிட்டால் அந்த சூறாவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்
வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ஆம்
வினாடியிலிருந்து இந்த சூறாவளி நிலத்தைப் பதம் பார்த்து அக்குவேறு
ஆணிவேராகப் பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர
ஆரம்பிக்குமாம்.
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த
சூறாவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும்
வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமளவுக்கு
பயங்கரமானது இந்த அதிபயங்கர சூறாவளிகள்.
No comments:
Post a Comment