Monday 9 July 2012

பேஸ்புக்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு


   பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் தினந்தோறும் பகிரப்படுகிறது. நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
இவைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான பேக்ரவுண்ட் மியுசிக்குடன் கூடிய வீடியோவாக உருவாக்கலாம்.
இதற்கு முதலில் http://www.timelinemoviemaker.com/ தளத்திற்கு செல்லவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.
இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும்.
பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும்.
உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு புகைப்படங்கள் இல்லை என்றால் புகைப்படத்தை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்.
முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம்.
இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்

300 வருடங்களாக நிலவும் நியூட்டனின் கணிதப் புதிர் தீர்க்கப்பட்டது


16 வயதேயான ஜேர்மன் இல் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவனான ஷௌர்ய்யா ராய்ஃப்,
300 வருடங்களுக்கு முன் கணித மாமேதையான சர் ஐசாக் நியூட்டனால் விடுவிக்கப் பட்ட கணிதப் புதிரை முதலாவது நபராகத் தீர்த்து சாதனை படைத்துள்ளார். இச்செய்தி இலண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
வளித்தடை இருந்தபோது  நீள்வட்டப் பாதையில் புவியீர்ப்பை எதிர்த்து பயணம் செய்யும் பொருளின் பாதையை எவ்வாறு உறுதியாகக் கணிக்க முடியும் என்பது தொடர்பான கணிதப் புதிரையே இம் மாணவன் தீர்த்துள்ளான் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர் 6 வயதாக இருக்கும் போதே இவரது தந்தையாரும் பொறியியலாளருமான சுஃபாஷிஸ் இவருக்கு கணிதத்தின் மிகக் கடினமான பாகமான நுண்கணிதத்தைப் (Calculus) போதித்துள்ளார். மேலும் இவர் சிறுவனாக இருந்த போதிலிருந்தே கணிதத்தில் அபாரத் திறமை உடையவனாயிருந்துள்ளார்.
 
இவருக்கு 12 வயதாக இருக்கும் போது இவரின் குடும்பம் ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தது. அங்கு உயர் கல்வி கற்கத் தொடங்கிய ராய்ஃப் தனது தந்தைக்கோ ஆசிரியர்களுக்கோ தெரிவிக்காமலேயே இப் புதிரைத் தீர்த்துள்ளார். இது மட்டுமன்றி 19 ஆம் நூற்றண்டில் எழுப்பப் பட்ட சுவர் ஒன்றின் மீது மோதும் பொருளின் வெடிப்பு பற்றிய இன்னுமொரு புதிரையும் இவர் தீர்த்துள்ளார்.
டைனமிக்ஸ் எனும் இயக்கவியற் துறையில் மைல்கல்லாக விளங்கும் இப்புதிர்களை விடுவித்ததன் மூலம் ஏவுகணைகள் தயாரிப்பில் முன்னேற்றகரமான அடுத்த கட்டங்களை நோக்கி செல்வதற்கு இவர் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது