Monday 2 January 2012

நெருப்பு நெருங்காத மரம்

நெருப்பு நெருங்காத மரம்


                      காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு-வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
                ரொடோடென்ரன் (Rhododendran) என்ற-ழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கி-விடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.
              பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாசஸ்தலமாக விளக்குகின்றன. பலத்த காற்றி-னையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.
             தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் அழைக்கப்-படுகிறது. இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்-படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-களில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை) கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்-திற்கும் அதிகமான பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்-துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இதனை அழைக்கலாம்.
                இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment