Monday 9 January 2012

இடிந்து போகுமா காதல் ஓவியம்


இடிந்து போகுமா காதல் ஓவியம் ?

யமுனை ஆற்றின் மாசுபாடு காரணமாக தாஜ்மகாலின் அடிக்கட்டுமானத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடருமானால்- இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ்மகால் இடியும் நிலை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காதல் மனைவி மும்தாஜூக்காக யமுனை நதிக்கரையில் 358 ஆண்டுகளுக்கு முன் ஷாஜகான் கட்டிய காதல் ஓவியம் தாஜ்மகால். முற்றிலும் பளிங்கு கற்களால் பளீரென கட்டப்பட்ட இந்த மாளிகை மெல்ல மெல்ல தன் பொலிவை இழந்து வருகிறது.
ஆக்ரா நகரின் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள்- காடுகள் அழிப்பு மற்றும் யமுனை நதி மாசுபாடு காரணமாக தாஜ் மகால் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
யமுனை நதி மாசு காரணமாக- தாஜ் மகாலின் அடிக்கட்டுமானத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிப்பு தாஜ்மகால் முழுமையையும் சிதைக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில்- தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஆக்ரா எம்.பி. ராம்சங்கர் கதேரியா- தாஜ்மகாலை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் அது முற்றிலும் இடிந்து விடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தாஜ்மகாலின் அடித்தளம் கடினமான மரத்தால் ஆனது. யமுனையின் மாசு காரணமாக அதில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால்- அரசு அதை பார்க்க அனுமதிப்பது இல்லை என்று தெரிவித்தார்.

டைனோசர் செல்லப்பிராணியா

பண்டைய மனிதர்கள் டைனோசரை செல்லப்பிராணியாக வளர்த்தார்களாம்??

டைனோசரும் மனிதர்களும் ஒரு காலத்தில் நண்பர்களாய் வாழ்ந்துள்ளனர் என்றால் நம்ப முடியுமா?  ஆனால் அது உண்மையிலும் உண்மை என்பதை சீன மற்றும் அமெரிக்க கூட்டு விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.
தென் மேற்கு சீனாவில் இதற்கான சான்றுகள் உள்ளதை கூட்டு விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாங்கிங் நகருக்கு அருகே உள்ள கிஜியாங்கிலுள்ள லியான்ஹுவா போசாய் பகுதியில் ஜிங்லிடா தலைமையில் சீனா  அமெரிக்கா விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
சீனாவின் லியான்ஹுவா போசாய் பகுதியில் மக்கள் சுமார் 700 ஆண்டு காலம் வாழ்ந்துள்ளனர். நாய் வளர்ப்பது போல டைனோசர்களை செல்ல பிராணிகளாக இப்பகுதியினர் வளர்த்திருக்கின்றனர்.
தாமரை இலைக்கோட்டை என்று பொருள் படும் வகையில் லியான்ஹுவா போசாய் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்பகுதியில் பல இடங்களில் 350 முதல் 400 டைனோசர் காலடி தடங்கள் தெளிவாக உள்ளன. கோட்டை போன்ற வீட்டை கட்டி அங்கு டைனோசர்களுடன் மக்கள் தங்கியிருந்திருக்கின்றனர்.
இது தவிர மேலும் பல ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த ஏராளமான டைனோசர் மற்றும் மனித தடயங்கள் மூலம் அரிய தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு ஜிங்லிடா கூறியுள்ளார்.அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இதில் மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.

செயற்கை ரத்தம்

செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை !

லண்டன்: 
இங்கிலாந்தின் எடின்பர்க் & பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை ரத்தம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் மூலம். செயற்கை ரத்தத்தை தயாரித்தனர். இந்த ரத்ததில் 25 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும் இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது. இன்னும் சில ஆண்டுகளில் இது பயன்பாட்டுக்கு வரும்.

பூமி அளவில் 2 புதிய கிரகங்கள்!


சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள்!

நியூயார்க் : சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘நாசா’ நேற்று அறிவித்தது. இதுகுறித்து ‘நாசா’ வெளியிட்ட அறிக்கை வருமாறு: விண்வெளியில் உயிரினங்கள் வசிக்க சாத்தியமுள்ள புதிய கிரகங்கள் குறித்து, கெப்ளர் என்ற வரிசையில் பெயரிட்டு, நாசா ஆராய்ந்து வருகிறது. அதில் புதிதாக 2 கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி உட்பட 9 கிரகங்கள் சுற்றி வரும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இந்த புதிய கிரகங்கள் இருக்கின்றன. சூரியனை போன்ற பெரிய நட்சத்திரத்தை இவை சுற்றி வருகின்றன. இரண்டு கிரகங்களும் பூமியின் அளவில் இருக்கின்றன.
அவற்றுக்கு கெப்ளர்&20இ, கெப்ளர்&20எப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் இடையே உள்ள இடைவெளியைப் போல இல்லாமல், புதிய கிரகங்கள், பெரிய நட்சத்திரத்தின் மிக அருகே இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. பூமியைப் போன்ற புதிய கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல். கெப்ளர் &20இ, கெப்ளர் &20எப் ஆகியவை முழுவதும் பாறைகளால் ஆனதாக இருக்கலாம்.

முதல் கிரகம் பூமியின் அளவிலும், கெப்ளர் &20எப் பூமியை விட சிறிது பெரிதாகவும் உள்ளன. நட்சத்திரத்தை கெப்ளர் &20இ கிரகம் 6.1 ஒரு நாளில் சுற்றி வருகிறது. கெப்ளர் &20எப், 19.6 நாட்களில் சுற்றி வருகிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரத்தின் அருகில் இருந்து சுற்றுவதால் அதிக வெப்பநிலை காரணமாக இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமாகாது.

கெப்ளர் &20இ கிரகத்தின் வெப்பநிலை 1,400 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கெப்ளர் &20எப் வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
இவை வசிக்க தகுதியற்றதாக இருந்தாலும், பூமியை போல உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள கிரகங்களை ஆராயும் கெப்ளர் திட்டத்தில் பூமி அளவில் 2 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது முதல்முறை. இவ்வாறு நாசா அறிக்கை தெரிவிக்கிறது.

பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு

பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு: நாசா தெரிவிப்பு.

 

உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று தெரிவித்துள்ளது.

கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி (Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.

எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.
நட்சத்திரங்களின் அளவு, வெப்பநிலை முதலான விடயங்களை கருத்திற்கொண்டு அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தூர எல்லையில் உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்கள் காணப்படலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய பிரதேசமானது உயிரினங்கள்வசிக்கத்தக்க வலயம்’  (habitable zone) என அழைக்கப்படுகிறது.
இதன்படி  எமது சூரிய தொகுதிக்கு அப்பால்வசிக்கத்தக்க வலயத்திற்குள்கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் கெப்ளர் 22- பி ஆகும். 600 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்த கிரகம் பூமியைவிட 2.4 மடங்கு பெரிதானதாகும். ஆதன் வெப்பநிலை சுமார் 22 பாகை செல்சியஸ் ஆகும்.
இவ்வருட ஆரம்பத்தில் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உயிர் வாழத் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிரகமொன்றை கண்டறிந்ததாக அறிவித்தனர். எனினும் நாசாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட இத்தகைய முதல் கிரகம்  கெப்ளர் 22- பி என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால்  மென்மையான வெப்பநிலை நிலவுகிறது. இது திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
          2005 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஏவப்பட்ட கெப்ளர் தொலைக்காட்டி சுமார் 155,000 நட்சத்திரங்களை அவதானித்து வருகிறது. இதுவரை இத்தொலைக்காட்டி மூலம் கிரகங்கள் என்ற அங்கீகாரம் பெறத்தக்கவை எனக் கருதப்படும் 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும்.
2

Wednesday 4 January 2012

மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை

மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை-படங்கள்,காண

   6 மாத பெண் குழந்தையொன்று ஆளை விழுங்கும் மலைப்பாம்புடன் விளையாடி வரும் அதிசய சம்பவம் இந்திய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.

United States of America

United States of America (Air Power)





It may be of interest to you to know that the US has the largest number of war planes in the world which is probably equal to the rest of the world put together!

Take a look from Kuwait US base - Ali Al Salem Air Base




























சூரியப் புயல்கள்

உலக அழிவு:

சூரியப் புயல்ள் - Solar Storm

நாம் இந்த பதிவுகளில் உலக அழிவுக்கான காரணங்களை பற்றி பார்த்து வருகிறோம்.இன்று அதில் சூரிய புயல்களை பற்றி இங்கு காண்போம்.இது யாரையும் பயமுறுத்த அல்ல...



சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது.
அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன.

பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.இந்நிலையில் ஆக.1ஆம் தேதி காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.

இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.



இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன.

வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை சூரிய சுனாமி என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது. செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.



சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மின் கிரிட் அதிகளவு வெப்பம் அடைந்தது; விமானங்களின் எலக்ட்ரானிக் கருவிகள் பழுதடைந்தன; செயற்கைக்கோள்கள், கப்பலில் உள்ள கருவிகள் செயல்படாமல் நின்றன. இதற்கு காரணம், சூரியன் தனது ஆழ்ந்த உறக்கத்தை கலைத்து விழித்துக் கொண்டதால் அதிகபட்ச மின்காந்த சக்தியை வெளிப்படுத்தியது தான். புயலாக வெளிப்பட்ட அந்த மின்காந்த சக்தி பூமியை தாக்கியது. சூரியன் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தியதால் தான் பூமியில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதேபோன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மின்காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. "சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது.

இதனால் செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள் வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்னை ஏற்படும். "பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரிசெய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும்' என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார். "விண்வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது.



இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ் ஷரின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் (69) சூரிய மின்காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது.

அப்போது, சூரியனின் வெப்பம் மிக அதிகபட்சமாக, 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல், மூன்று, நான்கு முறை சூரியனில் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013ம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு ரிச்சர்ட் பிஷ்ஷர் எச்சரித்துள்ளார்.

Monday 2 January 2012

சுருக்கேள்விகள்-மனிதன் கேட்கிறான்

சுருக்கேள்விகள்..... மனிதன் கேட்கிறான்

  காசிக்கும், கயிலைக்கும் செல்வதன் மூலம் சொர்க்கத்தை அடைய முடியும் எனில் - காசில்லாதவன் சொர்க்கத்தை எவ்வாறு அடைவது?

  அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனில், சோமாலியா மக்கள் யாருடைய குழந்தைகள்?

             ஈரேழு உலகிற்கும் படைப்பின் கடவுள் பிரமன் எனில் - வேறு மதம் சார்ந்தவர்கள் யாரால் படைக்கப்பட்டார்கள்?
    மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் - கோயில்களும் - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?

         முற்றும் துறந்தவன் முனிவன், முனிவர்க் கெல்லாம் முனிவன் கடவுள் எனில் - பல கோடீஸ்வரக் கடவுள்கள் இருப்பது எப்படி?

    தூணிலும் இருப்பான், துரும்பிலும், இருப்பான் கடவுள் எனில், தனிப்பட்ட முறையில் கோடீஸ்வரர்கள் எதற்கு?

      அநீதியை அழிப்பவன் கடவுள் எனில், பாவங்கள் நிறைந்த கலியுகம் எப்படிக் கடவுளின் விதியால் நிகழ்ந்து கொண்டிருக்கும்?

       பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்வதன் மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும் எனில், வழி அற்ற வறியவனுக்கு கடவுளின் ஆசி எப்படிக் கிடைக்கும்?

         கோயில் திருவிழாக்கள், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் கலவரங்களை ஏற்படுத்துமாயின் கலவரங்களை ஏற்படுத்தும் கடவுளும், மதங்களும் தேவையா?

   
       கருணை உள்ளவன் கடவுள் என்றால்  உயிர்ப் பலி கேட்டது யார்?

    எல்லாம் விதியின் செயல் எனில், தண்டனை ஏன் நமக்கு?

   ஒழுக்கத்தில் பிறந்த கடவுளைக் கவர, திருவிழாக்களில் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டங்களை ஆடச் சொன்னது யார்?

   எல்லாம் அவன் செயல் எனில், குற்றங்களுக்குப் பின்னாலும் கடவுள் நிற்கிறாரா?
   தெய்வம் நின்று கொல்லும் அதுவரை, பாதிக்கப்பட்டவன் உயிரோடு இருப்பானா?

   எல்லாவற்றையும் காக்கும் கடவுளைக் காக்க, கதவும் பூட்டும் எதற்கு?

   நல்லவர் மனதெங்கும் கடவுள் உள்ளார் எனில், கடவுளை மலையேறித் தரிசிக்க வேண்டிய அவசியம் என்ன?

கடவுள் முன் அனைவரும் சமம் எனில், சிறப்புக் கட்டண நுழைவுவாயில் எதற்கு?

     அவனன்றி ஓர் அணுவும் அசையாது அணுவின்றி அவனாலும் அசைய முடியாது

       பாவத்தின் சம்பளம் மரணம் எனில், பிறந்த குழந்தைகளும் இறப்பது ஏன்?

    சமஸ்கிருதம் கடவுளின் மொழி எனில், சமஸ்கிருதம் தெரியாதவர்கள் கடவுளை எவ்வாறு தொடர்பு கொள்வது? கற்களில் செய்யப்பட்டு, கதவுகளில் அடைக்கப் பட்டவர் கடவுள் எனில், கதவுகளுக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு கடவுள் எப்படி உதவுவார்?

உயிர்கள் வாழ வாய்ப்புள்ள கிரகம்

பூமியை போன்றே, உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித் துள்ளனர். பூமிக்கு, 600 ஒளிவருட தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22 என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஒளி வருடம் என்பது சுமார் 10 ட்ரில்லியன்  கிலோமீட்டர் தூரத்திற்கு சமமானது.
தண்ணீர் உட்பட உயிரினங்கள் வாழ தேவையான சூழ்நிலை, இந்த கிரகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமி உள்ள சூரிய மண்டலம் தவிர விண்வெளியில், உயிரினங்கள் வசிக்ககூடிய கிரகம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கெப்ளர் தொலைநோக்கி மூலம் விண் வெளியை ஆராயத் தொடங்கியது. இந்தத் தொலை நோக்கி மூலமே, தற்போது இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியும்




            சிட்னி, டிச. 14- வெப்பம் மற்றும் அழுத்தத்தில் பூமியைப் போலவே பெரும்பகுதியை கொண்ட செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத் தியம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானி கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழக வானியல் ஆராய்ச்சி பிரிவு பேரா சிரியர் சார்லி லைன்வீவர். இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வசிக்க முடியுமா என்பது பற்றி தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுபற்றி லைன்வீவர் கூறியதா வது:
          பூமியின் மொத்த அளவில் 1 சதவிகிதம் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் தட்பவெப்பம், அழுத்தம் ஆகியவற்றை போலவே செவ்வாய் கிரகத்தின் 3 சதவிகித இடங்கள் உள்ளன. மீதி பகுதி முழு வதும் புதைந்த நிலையில் காணப்படு கிறது. பூமியின் 1 சதவிகித பகுதியில் உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளதை போல, அதே வெப்பம், அழுத்தம் கொண்ட செவ்வாயின் 3 சதவிகித பகு தியில் உயிர்கள் வசிப்பது சாத்தியம்.
செவ்வாயின் துருவங்களில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பது ஏற் கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பூமியில் உள்ள அளவுக்கு இருக் குமா, அங்கு உயிரினங்கள் குடியேறி னால் அவற்றுக்கு தேவையான அளவு இருக்குமா என்பது பற்றி தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. -இவ் வாறு லைன்வீவர் தெரிவித்தார்.


.

2013 இல் விண்வெளியிலிருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

          விண்வெளியில் பறந்து பூமிக்கு மேல் தொங்கிக் கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் கடைசி வளைவுப் பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனிலிருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள். அப்படி ஒரு ஹீலியம் பலூன் விண்கலத்தை ஸ்பெயின் ஜோஸ் மரியானோ லோபஸ் என்ற தொழிலதிபர் உருவாக்கி உள்ளார்.
          பூமியின் தரைமட்டத்திற்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த விண்கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும். ஹீலியம் வாயு எந்த ஒரு பொருளையும் உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது. இந்த கலம் விண்வெளிப் பகுதியை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும். அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம் செய்த பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பும்.

       குறைந்த அதிசிறந்த  இக்கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்பாக ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிறக் கதிரானது  ஊதா, கருநீலம்,  நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என ஏழு வகையான கதிர்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு கதிருக்கும் வெவ்வேறு  அலைநீளமும்,  அதிர்வெண்ணும் உண்டு.
           (இதெல்லாம் நீங்கள் சின்ன வயதில் படித்தது தான்!).  சூரியக்கதிர்கள்  அண்டத்தில்  நேர்க் கோட்டில் பயணிக்கும்.  அப்படிப் பயணிக்கும் போது ஒரு மூலக்கூற்றையோ, தூசியையோ எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு அல்லவா? அத்தூசியின் தன்மையைப் பொறுத்து கதிர்களின் செயல்பாடு மாறுபடுகிறது.
       சூரியக்கதிர்கள் நம் காற்று மண்டிலத்தின் தூசித்துகள்கள் மீது மோதும் பொழுது அவை பெரும்பாலும் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் வெள்ளை நிறத்திலேயே தோற்றமளிக்கும். இதற்குக் காரணம் தூசித் துகள்கள் கதிர்களை உட்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றன.  எனவே கதிர்கள் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. ஆனால் காற்று மூலக்கூறுகள் மீது மோதும் பொழுது, இதற்கு நேர்மாறாகக் காற்று மூலக்கூறுகள்  அதில் பெரும்பான்மையான கதிர்களை உட்கொள்கின்றன.
       இதில் அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் (சிவப்பு) தப்பிப் போய் விடுகின்றன. ஆனால் குறைவான அலைநீளம் கொண்ட கதிர்களை (நீலம்) காற்று மூலக்கூறுகள் விடாமல் உட்கொள்கின்றன.  இவ்வாறு உட்கொள்ளப்பட்ட நீல நிறம் கதிர் வீச்சடைந்து பல திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. இதனால் தான் நமக்கு வானம் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது.

ஒரே ஒரு நுளம்புத்திரி எரியும் போது வரும் புகை 100 சிகரெட்டுக்களுக்கு சமமான பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.  இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நுளம்புகளை ஒழிப்பதற்கு இந்த நுளம்புத்திரிப் பக்கெட்டுக்கள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் போன்றன பெருமளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பாதிப்புக்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர். இந்த ஆய்வை மலேசியாவைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர்.
        ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வறண்ட காற்று அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து வெளிப்படும் விசையே சூறாவளி எனப்படுகிறது.
       இந்த மோதல்கள் அதிகமான அளவு நடை பெறும்போது அந்த சூறாவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.  டொர்னடோ என்ற பயங்கரமான சூறாவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம். அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளைத் துவம்சம் செய்துவிடுமாம்.
வானத்தில் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாகிவிட்டால் அந்த சூறாவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ஆம் வினாடியிலிருந்து இந்த சூறாவளி நிலத்தைப் பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராகப் பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூறாவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமளவுக்கு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூறாவளிகள்.

நள்ளிரவிலும் சூரியன் உதிக்கும்



         சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கும். மாலையில் மேற்கில் மறையும். அப்படிதான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நள்ளிரவிலும் சூரியன் உதிப்பதை நம்ப முடிகிறதா? பூமியின் வட துருவங்களில் தான் இந்த நிகழ்வுகள் நடக்கிறது. இங்கு சூரியன் மறைவது இல்லை. அதுவும் குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில் இங்கு நாள்முழுவதும் பகலாகத் தான் இருக்கும்.
            ஏன் இங்கே மட்டும் இப்படி நடக்கிறது? பூமியோட வடதுருவம் ஒரே அச்சில் மேல்நோக்கி சுழல்வதுதான் இதற்கு காரணம். இப்படியே பகல் முதல் நள்ளிரவு வரை தொடருகிறது. அப்புறம் என்னவாகும்? மறுநாள் வந்துவிடும். சூரியன் மறையவே மறையாது. இதுவே தொடர்ந்து நடக்கிறதால், இங்குள்ள மக்களுக்கு நள்ளிரவிலும் சூரியனைப் பார்க்கும் அனுபவம் உண்டு.
அதேபோல் இந்த பகுதிகளில் இன்னொரு நிகழ்வும் நடக்கிறது. அதாவது, டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியனை பார்க்க முடியாது. வட ஆர்க்டிக் பகுதியில் உள்ள நாடு ஸ்காண்டிநேவியா. இங்கு நார்வே, ஸ்வீடன், டென்மார்க், அய்ஸ்லாந்து, பாரோ தீவுகள், பின்லாந்து போன்ற பகுதிகள் இங்குள்ளன.



            பூமியின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆறு மடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திர னுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை. சந்திரனோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை கொஞ்சம் பரவாயில்லை.
            பூமியின் ஈர்ப்பு விசையின் பாதியளவு உள்ளது.  இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. எனவேதான் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பிருப்பதாக விஞ் ஞானிகள் தெரிவிக்கின்றனர். வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால் வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது.


          Ultra Slow motion காமெராக்கள் தான் கிரிக்கெட் போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வகை காமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக் கக் கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்கக் கூடிய காமெராக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த காமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.
ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1 ட்ரில்லியன்  Frames எடுக்க கூடிய புதிய காமெராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.
          இந்த புதிய காமெராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை காட்ட முடியும். இந்த காமெராவை  MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's கண்டுபிடித்துள்ளார்.
           சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை இவர் உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.