விண்வெளியில்
பறந்து பூமிக்கு மேல் தொங்கிக் கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது
சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு
ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
பூமியின் கடைசி வளைவுப் பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனிலிருந்து
பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும்
முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள். அப்படி ஒரு ஹீலியம் பலூன் விண்கலத்தை
ஸ்பெயின் ஜோஸ் மரியானோ லோபஸ் என்ற தொழிலதிபர் உருவாக்கி உள்ளார்.
பூமியின் தரைமட்டத்திற்கு மேல் 22 மைல்
பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும்
வகையில் உள்ளது. இந்த விண்கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும்
இணைக்கப்பட்டு இருக்கும். ஹீலியம் வாயு எந்த ஒரு பொருளையும் உயரத்தில்
கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது. இந்த கலம் விண்வெளிப் பகுதியை அடைய
சுமார் ஒரு மணி நேரம் ஆகும். அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம்
செய்த பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பும்.
No comments:
Post a Comment