Wednesday 28 December 2011

கல்லறையில் புதைத்த மனைவியை கட்டிலுக்கு அழைத்து வந்த கணவன் (பட காணொளி இணைப்பு)



வியட்நாமைச் சோ்ந்த Le Van என்பவர் அவருடைய மனைவி இறந்த பிறகு மனைவியின் கல்லறை மேல் தூங்கி வந்தார். 

55 வயது மதிக்கதக்க Le Van 2003 ம் ஆண்டு அவருடைய மனைவியை இழந்தார். 

2004 ம் ஆண்டு வரை மனைவியின் கல்லறையில் தூங்கி வந்தார். 

இரவில் மனைவி இல்லாமல் அவரால் தூங்க முடியவில்லை மற்றும் கல்லறைக்கு வெளியே காற்றும் மழையும் அதிகமாக இருந்த காரணத்தால், அவர் கல்லறையில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தார்.


பின்பு அவருடைய மனைவியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து காகிதம் மற்றும் களிமண்வார்ப்புகளை வைத்து போர்த்தி முகத்தின் மேல் ஒரு முகமுடி போட்டு மூடி வைத்து வீட்டில் தூங்க வந்துள்ளார்

2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி



மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வான்வெளியில் தண்ணீரை பாய்ச்சும் விண்மீன்கள்; விஞ்ஞானிகள் தகவல்

நெதர்லாந்தில் உள்ள வெஸ்டன் பல்கலைகக்கழக விஞ்ஞானிகள் விண் வெளி யில் உள்ள சூரிய குடும்பம் குறித்து ஒரு ஆய்வு மேற் கொண்டனர். அப்போது சூரியனை சுற்றி அளவில் சிறியதாக உள்ள நட்சத்திர கூட்டம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இவை பூமியில் இருந்து 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இவை கடந்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவை வாயுவினால் ஆன மேக மூட்டத்துக்குள் தூசி போன்று காணப்படுகின்றன.இந்த மேக மூட்டத்தை அதிநவீன தொழில் நுட்பத்து டன் கூடிய டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர். அப் போது அந்த நட்சத்திர கூட்டத்தை சுற்றிலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சி ஜன் வாயுக்கள் படர்ந்து இருப் பதை கண்டறிந்தனர்.

இதில் ஆச்சரியம் என்ன வென்றால், பல ஆயிரம் டிகிரி வெப்ப நிலை மாற்றத்தின் மூலம் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒன்று சேர்ந்து அது தண்ணீராக மாறுகிறது. அந்த தண்ணீரை நட்சத்திர கூட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் அந்த தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் துப்பாக்கி யில் இருந்து பாயும் குண்டின் வேகத்தை விட 80 மடங்கு அதிவேகத்தில் அவை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த தகவலை வெஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி லார்ஸ் கிறிஸ்டென்சென் தெரிவித்துள்ளார்.

சிங்கத்துடன் ஐந்து வாரம் உக்ரைன் நாட்டை சேர்ந்த வாலிபர் சாகசம்

உக்ரைன் : அலெக்ஸாண்டர் பிலிஷென்கோ என்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். இவர் மிருக காட்சி சாலை ஒன்றின் உரிமையாளர். அங்கு சில சிங்கங்களை பராமரித்து வருகிறார். இந்நிலையில், திடீரென சிங்கங்கள் வசிக்கும் கூண்டில் அவற்றுடன் ஐந்து வாரங்கள் தங்கியிருந்து சாதனை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் சிங்கங்களில் ஒன்று பிரசவத்திற்கு தயார் நிலையில் உள்ளது. சிங்கக்குட்டிகள் பிரசவிக்கும் போது தாம் கூண்டிலிருக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் கூண்டில் இருக்கப்போகும் நாட்களில் உணவு, உறக்கம் அனைத்துமே இந்த கூண்டுக்குள் தான் என்று கூறப்படுகிறது. இந்த கூண்டுக்குள் கேமிராக்களை பொருத்தி ஒரு தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் பிடிக்கப்பட்ட 10 தலை நாகம்


இலங்கை போக்கினைப் பகுதியில்  பிடிக்கப்பட்ட 10 தலை நாகம்.

மரபணு மாற்றத்தால் 'பாடும்' எலி : ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை (Video / Photo)


மரபணு மாற்றம் மூலம் பறவைகள் போன்று குரல் எழுப்பும் எலியை, ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம் "மனிதனுக்கு பேச்சாற்றல் வந்த ரகசியம் குறித்து. அறிந்து கொள்ள முடியும்' என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பரிணாம வளர்ச்சிக்கு "மியூட்டேசன்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரிணாம வளர்ச்சியின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் வகையில், ஜப்பானை சேர்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் களமிறங்கினர். எலிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து ஆய்வு நடத்தினர். இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளில் ஒன்று பறவைகள் போன்று குரல் எழுப்பியது தெரிந்தது. இதையடுத்து ஆய்வை, விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஆய்வுக் குழுவை சேர்ந்த, விஞ்ஞானி அரிக்குனி உச்சிமுரா கூறியதாவது:"பரிணாம வளர்ச்சிக்கு திடீர் மாற்றங்களே முக்கிய காரணி என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட வரலாற்று ஆய்வு உண்மை.
இதை அடிப்படையாக கொண்டு எலிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்திற்கு, "எலிகள் பரிணாம வளர்ச்சித் திட்டம்' என்று பெயரிடப்பட்டது. எலிகளின் மரபணுக்களில் (டி.என்.ஏ.,) சில மாற்றங்களை செய்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அப்போது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளில் ஒன்று, பறவைகள் போன்று குரல் எழுப்பியது. இது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலி, அதன் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து பாடும் குணாதிசயத்தை மரபணு மூலம் கடத்தும் என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.
எனவே, அந்த எலியின் மரபணு தன்மையை அடிப்படையாக கொண்டு மேலும் 100 "பாடும்' எலிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களுக்கு பேச்சாற்றல் வந்ததன் ரகசியத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பறவைகளின் பாடும் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்து ஆய்வு நடக்கிறது. இவ்வாறு அரிக்குனி உச்சிமுரா கூறினார்.

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!


anacondaபாக்கிஸ்தானில் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் மிகப்பெரிய பாம்பினை அகற்றுவதற்கு மேலதிகாரிகளிடம் உதவிகோரியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஊடக தகவல்களின்படி லாகூர் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான Rasheedan Bibi தற்செயலாக பல மாதங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கும் போது அதற்குள் கிடந்த சிறிய பாம்பை காணாமல் அந்த தண்ணீரை குடித்திருக்கிறார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிற்றுக்குள் இருந்து பாம்பு சிறிது சிறிதாக வளரத்தொடங்கியுள்ளது. காலப்போக்கில் இவரது வயிறு வீங்கி நிலமை மோசமான போது இவர் கர்ப்பமாகியுள்ளார் என நம்பப்பட்டது. எனவே வைத்திய உதவியை நாடினார் இவர். 7 மாதங்களின் பின்னர் இவரது வயிற்றுக்குள் வளர்வது என்ன என்பதை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்த போது அங்கே சுருண்டு படுக்கும் பெரிய பாம்மை கண்டு வியந்து போயுள்ளார்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த பெண் அதனை அகற்றுவதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவளது வயிற்றில் வளரும் ராட்சத பாம்பை அகற்ற உள்ளுர் அதிகாரிகளிடமும் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

A woman from Pakistan is appealing to authorities to assist her in getting surgery to remove a massive snake which is growing inside her abdomen.
According to Pakistani press 50-year-old Rasheedan Bibi from Saggar, north of Lahore, accidentally swallowed a small snake which was in her drinking water several months ago.
However after a few weeks Rasheedan began to expand, and she believed she was simply pregnant. But Rasheedan continued to grow and grow, and became very ill. After seven months of swelling up Rasheedan eventually sought medical help and went to a hospital.
According to Rasheedan the hospital staff used ultrasound to see what was growing inside her and it revealed a gigantic snake coiled around her innards.
Rasheedan, who comes from a poor rural background, is appealing to the local authorities to help her get the treatment to have the huge serpent removed

2 சூரியன்கள் உதிக்கும் கிரகம்: 

அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு:


Sun risingஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் “ஹெப்லர்” என்ற பெயர் கொண்ட விண்கலம் ஒன்றை விண்ணுக்கு அனுப்பினார்கள்.
 
இந்த விண்கலம் 2 சூரியன்கள் உள்ள கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் பூமியில் இருந்து 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தூரம் ஆகும். அதாவது 9 1/2 லட்சம் கோடி கி.மீட்டர் ஆகும்.  
 
2 சூரியன்களை சுற்றி வர இந்த கிரகம் 229 நாட்களை எடுத்துக் கொள்கிறது. 2 சூரியன்கள் இருந்தாலும் இவை ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இந்த கிரகத்திலும் பகல்-இரவு இருந்து வருகிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு சூரிய உதயங்களும், இரண்டு சூரிய அஸ்தமனங்களும் நிகழ்கின்றன.
 
மேலும் இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் ஏற்படுகிறது. சூரியன்கள் இரண்டும் நமது பூமியில் காணப்படும் சூரியனை விடச் சிறியவை. ஒன்று ஆரஞ்சு நிறத்திலும், மற்றொன்று சிவப்பு நிறத்திலும் தோன்றி மறைகின்றன.
 
ஒன்று நாம் காணும் சூரியனைவிட முக்கால் பங்கிற்கும் குறைவான அளவை உடையது. மற்றொன்று கால் பங்கிற்கும் குறைவானது.
 
இந்த பிரபஞ்சத்தில் பல வகை சூரியன்களும் (நட்சத்திரங்கள்), கிரகங்களும் உள்ளன என்பதையே இது காட்டுகிறது. ஹெப்லர் விண்கலம் கண்டுபிடித்ததால் இந்த கிரகத்துக்கு “ஹெப்லர் 16பி” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியா கார்ல்சேகன் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Top 10 Best Intelligence Agencies in the World –2011


An intelligence agency is basically a governmental agency which is made for information gathering. There purpose is the national security and defense. The information they gather can be about espionage communication interception, cryptanalysis, cooperation with institutions and evaluation of public sources.
An intelligence agency is a national power. These agencies normally work without the knowledge of public even their successes are not remembered by the people but their failure is always the HIGHLIGHTED news of the press, Well, here we have the list of top 10 best intelligence agencies in the world and the ranking is based on their rate of success and taking care of the situations efficiently.
So, let us take a look!
10. CSIS, Canada
CSIS Intelligence Agency Top 10 Best Intelligence Agencies in the World – 2011
It was created in 1984, it is made on the same pattern of CIA and MI6, which are civil agencies but connected to the military and police.
9. ASIS, Australia
asis Intelligence Agency1 Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This agency was formed on 13th May,1952. Their annual budget is $162.5m AUD(2007). This agency is the Australian government intelligence agency which is responsible for collecting foreign intelligence. Its main purpose is the protection of country’s political and economic interests.
8. RAW, India
RAW India Intelligence Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This was formed in 21 September, 1968. Their headquarters are in New Delhi, India. It was formed after the two major wars in India, first the Sino-India war in 1962 and then the Pakistan-India war in 1965. Its responsibility is the collection of external intelligence, counter terrorism and covert operations.
7. MOSSAD, Israel
mossad Intelligence Agency Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This was formed on 13th December, 1949 as the Central Institute for Coordination. The Mossad  is responsible for intelligence collection and covert operations. Its director directly reports to the head of the state.
6. BND, Germany
bnd Intelligence Agency Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This was formed on 1st April, 1956 and their employees are around 6,050. The BND acts as the early warning system to alert the German government. They depend highly on wiretapping and electronic surveillance f international communications.
5. DGSE, France
dgse Intelligence Agency Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This was formed on 2nd April, 1982. They work under the direction os French ministry of defense, they provide intelligence and national security to the country.
4. FSB, Russia
FSB Intelligence Agency Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This was formed in 3rd April, 1995 and their employees are around 350,000. These are involved in the counter intelligence, internal and border security, counter terrorism and surveillance. Their headquarters are in Lubyanka Square, Downtown Moscow. All the intelligence agencies including KGB and NKVD work under the instructions of FSB.
3. MI6, United Kingdom
mi6 Intelligence Agency Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This was formed in 1909 and their headquarters are in Vauxhall Cross, London. These are the british equivalent to the CIA and they are really effective.
2. CIA, United States
cia Intelligence Agency Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This was formed in 18th September, 1947 and their employees are around 20,000. This agency is responsible for gathering data from the other countries and national security.  They are also the advisors of the policy makers.

1. ISI, Pakistan

ISI Best Intelligence Agency Top 10 Best Intelligence Agencies in the World – 2011
This was formed in 1948 and their headquarters are in Islamabad, Pakistan. ISI has the lengthiest record of success, After the Indo-Pakistan war of 1947 this was formed in 1948. ISI have won more GOLD MEDALS than any other intelligence agency and Lieutenant General Ahmad Shuja Pasha, PA Director General is leading this intelligence agency.
They have the highest number of agents all over the world, almost 10,000, ISI is one of the strongest intelligence agencies of the world. Pakistan is really proud of it!

Top 10 Richest countries in the world

When we look around us, we can obviously see people who are fortunate to be rich and some who are not as lucky and have to work hard to meet ends. Here are the Top 10 Richest countries in the world.
*2011-07-19: The entries now reflect the 2010 numbers from the World Bank and are in American Dollars

10. India

India Flag
Gross domestic product: $1,538,000,000,000

9. Canada

Canada Flag
Gross domestic product: $1,574,000,000,000

8. Italy

Italy Flag
Gross domestic product: $2,055,000,000,000

7. Brazil

Brazil Flag
Gross domestic product: $2,090,000,000,000

6. United Kingdom

United Kingdom Flag
Gross domestic product: $2,247,000,000,000

5. France

France Flag
Gross domestic product: $2,583,000,000,000

4. Germany

German - Flag
Gross domestic product: $3,316,000,000,000

3. Japan

Japan Flag
Gross domestic product: $5,459,000,000,000

2. China

China Flag
Gross domestic product: $5,878,000,000,000

1. United States

United States of America Flag
Gross domestic product: $14,660,000,000,000


Website
1
yahoo.com
2
google.com
3
youtube.com
4
live.com
5
msn.com
6
myspace.com
7
wikipedia.org
8
facebook.com
9
blogger.com
10
yahoo.co.jp

2012-ல் உலகம் அழியுமா?


2012-ல் உலகம் அழியுமா? – இந்திய விஞ்ஞானி விளக்கம்

 

                    அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள்.
                  2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.
இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
1. மாயன் காலண்டர்:
                  மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.
2. சூரியப் புயல்கள்
                   சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.
3. அணு சிதைவு
                     ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். 27 கிலோ மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் வைத்து அணுக்களை ஒன்றிணைத்து வெடிக்க வைப்பது திட்டம். எதற்காக இது? உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள இந்த சோதனையாம். 2012-ல் இந்த சோதனை நடக்கிறதாம். அப்படி நடந்தால் இந்த பூமியே நொறுங்கிவிடுமாம்.
4. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது…
                  விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.   கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி யுத்தம் (Armageddon) நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள்.  யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை  பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு  2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.
இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.
5. சூப்பர் வல்கனோ
                    இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றில் வாயில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 650000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப் பார்த்தால் இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்!
6. கணிதவியல் அடிப்படையில்…
                    அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.
7. புவியின் காந்தப் புலம்
                  வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரிந்திருக்கும். இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம்.
-இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.

ஆனால் நமது இந்திய விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
 இதோ ஒரு பாஸிடிவ் பதில்:
            சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள், மேலே கூறப்பட்ட 7 காரணங்களையுமே உடான்ஸ் என்கிறார்.
          சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
             சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.
           விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது.
            உலக மக்களின் தேவைக்காக சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றும் முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே மின்சாரத்திற்காகவோ, குடிநீருக்காகவோ எதிர்காலத்தில் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது.
             ஒரு மனித உடலின் செல்லில் இருந்து அல்லது மிருகத்தின் ஒரு செல் அணுவில் இருந்து குளோனிங் முறை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகள் சோதனையாக மட்டுமே உள்ளது. இதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். ஆகவே இது ஆய்வுடன் நின்று விட்டது.
           பூமி வெப்பமாவதை தடுக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக மாசு கட்டுப்பாடு செய்து அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்…” என்றார்.
நாமும்.. சாதகமானதையே நம்புவோமே!

Friday 23 December 2011

SUN

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் !

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த சூரியன் தற்போதுவிழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.



வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.


“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.


இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.


அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.