Monday 17 December 2012

தாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல – பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்!


காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.   தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.

ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.   இச்சிவன் கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரியர்.தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எந்தக் கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்து மும் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.   தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் – மும்தாஜ் காதல் கதை என்கின்றார். நியூயோர்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங்களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணியான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம்பெற்று இருக்கவில்லை.   ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கின்றார் பேராசிரியர் ஓக்.   தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை, காரணம் கேட்டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக் கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.   பேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாஜ் மஹால் – உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.   உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர். 

Saturday 29 September 2012

செவ்வாய்க் கிரகத்தில் நீரோடையை கண்டுபிடித்தது கியூரியாசிட்டி



   செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருக்கின்றது என கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.   செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் கியூரியாசிட்டி என்ற ஆய்வு விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.   அது கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி வெற்றிகரமாக அங்கு தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.   அத்துடன் அண்மையில் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை போட்டோ எடுத்தும் அனுப்பியுள்ளது.   மேலும், அங்குள்ள மலையின் பாறையை படம் எடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எனினும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது எற்கனவே நடந்த ஆய்வில் தெரிய வந்தது.   தற்போது அங்கு மிகப் பெரிய அளவில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
              இவை காலே கிராடர் எரிமலையின் வட பகுதியில் உள்ளது. அதன் மூலம் இங்கு நீரோடை மற்றும் சிற்றாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை கேத்தாக் என நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.   இந்த சரளை கற்களின் பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. காற்றின் மூலம் அடித்து வரப்பட்டால் இது போன்று உருவம் கிடைக்காது. நீரோட்டத்தின் வேகத்தை பொறுத்து வடிவம் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், அந்த பாறைகளின் வடிவத்தின் அடிப்படையில் நீரோடை மற்றும் சிற்றாறுகளில் வினாடிக்கு 3 அடி தண்ணீர் ஓடியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.   இருப்பினும் இன்னும் 2 ஆண்டுகள் கியூரியா சிட்டிசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது இதனால் செவ்வாய் கிரகத்தில் இருந்து இன்னும் பல அதிசயமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday 17 September 2012

காதலை சொல்ல தயக்கமா..? கொஞ்சம் படிச்சிட்டு போங்க..

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் காதல் மனதில் கண்டிப்பாக மலரும். அவ்வாறு காதல் மலரும் போது, அந்த காதலை சொல்ல முடியாமல் தவிப்போரின் எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் காதலை அதிகம் முதலில் வெளிப்படுத்துபவர்கள், ஆண்களே! அவ்வாறு காதல் மனதில் வந்து அந்த காதலை சிலருக்கு எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு தவிக்கும் நம் காதல் மன்னன்களுக்கு, எப்போது, எப்படி காதலை சொன்னால் காதல் வெற்றியடையும் என்று ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அந்த டிப்ஸ்-ஐ படித்துப் பார்த்து, பின்னர் சொல்லுங்களேன்…
* முதலில் காதலை காதலியிடம் சொல்லும் போது, காதலியின் குணத்தை நன்கு தெரிந்து கொண்டு, பின்னர் சொல்லச் செல்ல வேண்டும்.
* பின்பு எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை ஒத்திகைப் பார்ப்பது மிகவும் சிறந்தது. ஏனேனில் முதலில் எப்படி பேசுகிறோமோ, அது தான் கடைசி வரையில் அவர்களது மனதில் இருக்கும். ஆகவே இதனை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வெளிப்படுத்துங்கள்.
* அதிலும் பெண்கள் எந்த டென்சனும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் நேரத்தில், உங்கள் காதலை தெரிவித்தால், அப்போது தான் உங்கள் அன்பு காதலாக மாறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் அவர்கள் உங்களுடன் எப்போது பேச விரும்புகிறார்களோ, அப்போது சொன்னால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றியில் முடியும் வாய்ப்புகள் அதிகம்.
* முக்கியமாக பெண்களுக்கு, தங்களை பற்றி மிகவும் வர்ணித்து, பாராட்டி பேசினால் மிகவும் பிடிக்கும். ஆகவே அவர்களிடம் பேசும் போது, நேராக காதலை சொல்லாமல், சற்று அவர்கள் சந்தோஷப்படும் வகையில் சிலவற்றை சொல்லி, பின்னர் காதலை சொன்னால் அந்த சந்தோஷத்தில் அவர்கள் உங்கள் காதலை ஏற்க வாய்ப்புக்கள் உள்ளது. அதற்காக அனைத்துப் பெண்களையும் அப்படி சொல்ல முடியாது, அது ஒவ்வொருவர் குணத்தைப் பொறுத்தது.
* அனைத்துப் பெண்களுக்கும் மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே காதலை சொல்லும் போது, ஒரு மலர் கொத்துக்களை வாங்கிக் கொண்டு, அவர்களிடம் கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம்.
* பெண்களுக்கு எப்போதும் மறைமுகமாக பேசினால் பிடிக்காது. ஆகவே எப்போதும் காதலை சொல்லச் செல்லும் போது, அவர்களிடம் மொக்கை போடாமல், நேரடியாக காதல் செய்வது சம்பந்தமாக மட்டும் பேசி, காதலை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அந்த மொக்கையிலேயே அந்த காதல் தோல்வியில் முடிந்துவிடும்.
* உங்களுடன் மிகுந்த நட்போடு பழகும் பெண்களாக இருந்தால், அவர்கள் உங்களிடம் காதலை வெளிப்படுத்தாமல், உங்கள் மீது அதிக உரிமையோடு, தேவையில்லாத காரணத்திற்கெல்லாம் சண்டை போடுபவராக இருந்தால், அப்போது அவர்கள் உங்களை காதலிக்கிறார், ஆனால் காதலை சொல்ல தயங்குகிறார் என்பதைப் புரிந்து, அந்த நேரத்தில் உங்களிடம் இருக்கும் காதலை வெளிப்படுத்தலாம். (முக்கியமாக காதல் செய்கிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் இவ்வாறு செய்ய வேண்டும்.)
* மேற்கூறிய அனைத்தையும் விட முக்கியமானவை, காதலை தெரிவிக்கும் போது உங்கள் பேச்சு, பாவனை அனைத்துமே, அவர்கள் மீது இருக்கும் அன்பை காட்டும் வகையில் இருக்க வேண்டும். உங்களுக்கு காதலியிடம் தனியாக பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது, சற்றும் தயங்காமல், மனதில் இருக்கும் அனைத்தையும் அன்போடு சொல்லிவிட்டால், அப்போதே காதலுக்கான பதில் தெரிந்துவிடும்.
ஆகவே நண்பர்களே! காதலைச் சொல்லும் போது மேலே சொன்ன அனைத்தையும் மனதில் கொண்டு, பின்னர் அதற்கு ஏற்றாற்போல் நடந்தால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றியில் முடியும். ஆகவே “சொல்லத் தான் நினைக்கிறேன்…சொல்லாமல் தவிக்கிறேன்…காதல் சுகமானது…” என்று இல்லாமல், காதலை சொல்லுங்க… காதல் வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க…

நீரின் உதவியோடு இலத்திரனியல் சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியும் .

  கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை உபயோகிக்கும் போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக பெட்டரியின் சார்ஜ் சடுதியாகக் குறைவதைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக மின்சார வசதி இல்லாத ஓர் இடத்திற்கு செல்லும் போது பாவனையாளர்கள் எதிர்நோக்கும் சிரமம் சொல்லில் அடங்காது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் நமக்கு உதவக்கூடிய சாதனமொன்றினை சுவீடன் நாட்டு நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.
இச்சாதனத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டு நமது கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
இதற்கென உப்புநீர் அல்லது சிறுநீரைக்கூட உபயோகிக்கமுடியும்.
‘பவர் டிரக்’ என்ற இச்சாதனத்தில் ஒரு மேசைக்கரண்டி நீரை உபயோகிப்பதன் மூலம் சுமார் 10 மணித்தியாலங்கள் வரை உபயோகிக்கக்கூடியவாறு உங்கள் பெட்டரியை சார்ஜ் செய்துகொள்ளமுடியும்.
இதன் செயன்முறையானது சிறியதொரு இரசாயன மாற்றம் மூலமே நிகழ்கின்றது.
இச்சாதனத்தில் ‘சோடியம் சிலிசைட்’ என்ற விசேட மூலப்பொருளொன்று உபயோகப்படுத்தப்படுகின்றது.
‘சோடியம் சிலிசைட்’ நீருடன் சேரும் போது ஐதரசன் வாயு உருவாகின்றது.
இதன்மூலமே மின்சாரம் உருவாக்கப்பட்டு இச் செயற்பாடு நடைபெறுகின்றது.