சீனாவில் சேவல் முட்டையிட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி
12:38
Thiru Arun
சீனாவிலுள்ள சேவலொன்று முட்டையிடுவது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்வதற்கு தற்போது ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சுமியோ கிராமத்தில் வசிக்கும் ஹுவாங் லீ(47) என்பவர் வளர்த்து வந்த சேவலே இவ்வாறு முட்டையிடத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மாரி காலத்தில் கோழிகள் அனைத்தையும் சமைத்து விட சேவல் மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருநாள் கோழிக்கூட்டைச் சென்று பார்க்கையில் அங்கு சேவலுக்கருகில் முட்டை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
இத்தகவல் தொலைக்காட்சிகள் மூலம் எல்லா இடங்களுக்கும் பரவியதையடுத்து உள்நாட்டு விவசாயத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானிகள் எனது சேவலை பரிசோதனைக்காக வாங்கிச் சென்றுள்ளனர்.
அது சேவலைப் போன்று தோற்றமளிக்கும் கோழியா அல்லது அனைத்து கோழிகளும்
இறந்தபின் அச்சேவல் கோழியாக மாறிவிட்டதா என விஞ்ஞானிகள் ஆராய
விரும்புகிறார்கள் என ஹவாங் லீ கூறியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை அது ஏனைய சேவல்களைப் போன்றே காலையில் எழுந்து கூவும்.
ஏனயை கோழிகளுடன் அது சேவல் போன்றே நடந்துகொண்டது எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment